புல்லின் பெருமிதம்

புல்லின் பெருமிதம் மாசறு நிலையோ;அன்பின் பெருவிரிவில்வேர் கொண்டுள்ள மாண்போ; சூர்யனைத் தன் தலையில் தாங்கியமையால் சுடரும் பேரறிவோ; இனி அடையப் போவது ஏதொன்றுமிலாத உயர் செல்வ நிறைவோ; அருளானந்தப் பெருநிலை ஆக்கமோ; புன்மையாம் வேகத் தடையாகி நின்ற பெருவியப்போ இவ் வைகறைப் பொழுதில் புத்துயிர்ப்பு கொண்டு நிற்கும் இப்புல்லின் பெருமிதம்? -தேவதேவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *